தமிழக முதலமைச்சர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறி, திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆத்தூர் போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டிருந்தார்.இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நீதிமன்றம் அவருக்கு நள்ளிரவில் ஜாமீன் வழங்கி அதிரடி உத்தரவிட்டது. ஜாமீனில் அவர் விடுதலையானதைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தின் வெளியே திரண்டிருந்த நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், தங்களது தலைவருக்கு உற்சாக முழக்கங்களுடன் மாஸ் வரவேற்பு அளித்துக் கொண்டாடினர். ஆளுங்கட்சியின் அடக்குமுறைக்கு பயப்பட மாட்டோம் என நிரூபிக்கும் வகையில் அமைந்த அந்தப் பரபரப்பான கொண்டாட்டக் காட்சிகள் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலையான முழுமையான வீடியோ இதோ!
For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com
Comments